வவுனியா புகையிரத நிலையத்திற்கு 2 நாட்களின் பின்னர் வருகைதந்த புகையிரதம்!!

648

புகையிரதம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்ஸை வரை பயணத்தை மேற்கொண்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் கடந்த 27ம் திகதி குருநாகல் கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 4 புகையிரத பெட்டிகள் சேதமடைந்தடைந்ததுடன் புகையிரத வீதியும் பாதிப்படைந்திருந்தது. இதன் காரணமாக இரு நாட்களாக (27,28) வடக்கிற்கான புகையிரத சேவையும் பாதிப்படைந்திருந்தது.

இந்நிலையில் புகையிரத வீதி புனரமைக்கப்பட்டு வடக்கிற்கான புகையிரத சேவை வழமைக்குத் திரும்பிய நிலையில் கொழும்பிலிருந்து இன்று (29.11) காலை 5.45 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் காலை 11.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்ததுடன் 11.35 மணியளவில் காங்கேசன்துறை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது.