வவுனியாவில் 20க்கு மேற்பட்ட பகுதிகளில் மின்தடை : மக்கள் சிரமம்!!

556

மின்தடை

வவுனியாவில் 20க்கு மேற்பட்ட பகுதிகளில் இன்று (14.12.2019) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்தமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

மின்சார கம்பிகளில் முட்டிக்கொண்டிருக்கும் மரங்களை அகற்றுதல் மற்றும் புதிய மின்சார வயர்கள் மாற்றுதல், புதிய மின்கம்பம் நாட்டுதல், பராமரிப்பு வேலை போன்ற செயற்பாடுகள் காரணமாக மின்தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகை வரை, கோவில் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, கீர்த்தி அரிசி ஆலை, குடாகச்சக்கொடிய கல் உடைக்கும் ஆலை , செட்டிக்குளம் நகரம்,

இராசேந்திரகுளம் , பம்பைமடு , சுஜன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, Omega Line, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, வவுனியா வைத்தியசாலை,

சுகாதார திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா நீர்ப்பாசன சபை, வவுனியா புகையிரத நிலைய வீதி, பூங்கா வீதி , பட்டாணிச்சூர், வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் பல பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையிலும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட மாட்டாது. எனினும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை இடம்பெறும் என மின்சாரசபை அறிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள செய்தியை படியுங்கள்.

வவுனியாவில் மூன்று தினங்களுக்கு மின்தடை : முழுமையான விபரம் உள்ளே!!