வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் மரணம்!!

537

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியாவில் விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிக்குளம் பகுதியினை சேர்ந்த சண்முகநாதன் வாசுதேவன் வயது(48) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்தவர் ஆவார்.

கடந்த 9 ம் திகதி மேற்படி நபர் துவிச்சக்கரவண்டியினை உருட்டிக்கொண்டு வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக பிரதானவீதியில் நடந்து சென்றுள்ளார். இதன்போது அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவரை மோதித்தள்ளியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மறுநாள் 10ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.