வவுனியாவில் தாயும் மகளும் பொலிசாரால் அதிரடியாக கைது!!

720

வவுனியாவில்..

பேருந்தில் சென்ற பெண்ணிடமிருந்து இன்று (27.12.2019) மதியம் பணப்பை தி ருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற பெண்ணின் பையிலிருந்த பணப்பையில் இருந்து பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகள் தி ருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

பேருந்திலிருந்து கீழே இறங்கிய பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை பார்த்த போது பணப்பை தி ருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த பெண்ணிற்கு அருகே பேருந்தில் நின்று வந்த தாய், மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.