வவுனியாவில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவன் : கண்ணீர் மல்க சாதனையை விபரித்த சோகம்!!

1667

இராமகிருஷ்னன் துலக்சன்

வறுமையிலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும் என்ற எனது தன்னம்பிக்கையே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் பௌதிக விஞ்ஞானதுறையில் முதலிடம் பெற்ற இராமகிருஷ்னன் துலக்சன் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த இராமகிருஷ்னன் துலக்சன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெளியாகிய பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது தந்தை கமம் செய்துதான் என்னை கற்பித்தார் எனது குடும்பம் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்டது.

நான் தினசரி 6 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து தான் எனது கல்வியினை தொடர்ந்தேன். தனது குடும்பத்தின் நிலமையினை அறிந்த பாடசாலை ஆசிரியர்கள் என்னிடம் பாடசாலை சார்ந்த எவ்வித கட்டணங்களும் அரவிடவில்லை.

அத்துடன் நான் ஒர் ஆசிரியர் வீட்டிருந்து தான் எனது கல்வியினை தொடர்ந்தேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது பரீட்சை பெறுபேற்றினை கேள்வியுற்றதுடன் எனது வீட்டில் நேற்றிரவு அனைவருமே உணவு உண்ணவில்லை. அந்த அளவிற்கு மிக சந்தோசத்தில் எனது வீட்டார் இருக்கின்றனர்.

இரவு 12 மணிவரை நான் கல்வி கற்பேன். அவ்வாறு கல்வி கற்றதன் பிரதிபலிப்பே இப் பரிட்சை பெறுபேற்றினை அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் பொறியலாளராக வருவதே எனது இலட்சியமாகும்.

இறுதியில் கண்ணீர் விட்டு அழுது வறுமையினை ஒர் காரணமாக வைத்து படிப்பினை கைவிட வேண்டாம் என தெரிவித்துடன் தனக்கு கற்பித்த பாடசாலை ஆசிரியர்கள் , தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் எனது கல்விக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்தார்.