உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படுமா? வெளியாகியுள்ள அறிவித்தல்!!

636

உயர்தரப் பரீட்சைகள்

2020ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையை நவம்பர் மாதம் வரை பின்தள்ளி வைப்பதற்கான தீர்மானம் எவையும் எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பில் வெளியான தகவல்கள் பொய்யானவை என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும், அதேநேரம் 2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் திட்டமிட்டப்படி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.