வவுனியா பொலிஸார்..

தற்போது உலக நாட்டு மக்களை பீ தியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் விஷேட முன்னோடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே கையை சுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு,

பொலிஸ் நிலையத்திற்குள்ளே வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலனவர்கள் முகத்திற்கு முகக்கவசம் அணித்துள்ளதுடன் கையுரையும் அணிந்துள்ளனர்.

இச் செயற்பாடானது அனைத்து சமூகத்திற்கும் முன்னோடியாக விளங்குகின்றது. பொதுமக்கள் அனைவரும் இவ் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.






