அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் பிரதமர் வழங்கியுள்ள உத்தரவு!!

710

அரச ஊழியர்களின்..

அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி இம்மாத சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் தொற்று அ ச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது, இந்லையில், மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி இம்மாத சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.