இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 65 ஆக அதிகரிப்பு!!

621

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸினால் இதுவரை 65 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கொட தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

65 நோயாளர்களில் சிறுவர்கள் உடபட இளம் வயதினரும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.