யாழில்..
யாழ்ப்பாணம் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.
அந்த யுவதி சில காலத்துக்கு முன்னர் த ற்கொ லை செய்து உயிரிழந்துள்ளார் . அதன் பின்னர் குறித்த இளைஞர் மனமுடைந்து வாழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டில் த ற்கொ லை செய்து உயிரிழந்துள்ளார். யாழ் கந்தரோடையைச் சேர்ந்த பாலசிங்கம் சசிகரன் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்