அரிய வகை பொருட்கள் மற்றும் பொக்கிஷங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் டென்மார்க்கில் விபச்சார ரகசியங்கள் குறித்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் ரெட்லைட் மாவட்டத்தில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபச்சார அழகிகளின் வேதனையான வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இது தொடங்கபபட்டதாக அதன் நிறுவனர் மேல்சர்டி வின்ட் தெரிவித்தார்.
தற்போது இந்த விபச்சார அருங்காட்சியகம் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு அதிசய இடமாக மாறிவிட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.