விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம்!!(படங்கள்)

441

இந்தோனேஷியாவில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜகார்த்தா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செரோடின்(46).

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் Neurofibromatosis என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் உடல் முழுதும் சிறு சிறு கட்டிகளுடனும், முகத்தில் சதை வளர்ந்தும் காணப்படுகிறார்.

நான்கு பிள்ளைகளின் தாயான செரோடின், மிகவும் ஏழ்மையான சூழலில் வசித்து வருகின்றார். இதற்கிடையே இந்நோயை பலரையும் தொற்றி விடலாம் என அஞ்சிய கிராம மக்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் கிராமம் என்பதால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு சிரமமாக உள்ளது என செரோடின் தெரிவித்துள்ளார்.



S1 S2 S3