சீனாவில் கடும் குளிரை சமாளிக்க வாலிபர் ஒருவர் தனது காரை எரித்து குளிர்காய்ந்த சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் நாஜிங்க் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தார். அங்கு தற்போது கடும் குளிர் நிலவுவதால் குளிரை சமாளிக்க அவர் செய்தது அவரை சிறையில் கொண்டுபோய் விட்டுள்ளது.
அதிக அளவில் மது அருந்தியிருந்த அந்த நபர் அதிக விலையுடைய வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டில் ரக காரை குளிர்காயும் பொருட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
பிரபல ஹொலிவுட் படமான ஹாங் ஓவரில் வருவது போல போதையில் இருந்த அவருக்கு தான் இவ்வாறு செய்தது ஞாபகமே இல்லை. அடுத்த நாள் அவரது வீட்டிற்கு வந்த பொலிசார் விவரத்தை கூற அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.
தீ பற்றி எரிந்த காரை பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், பொலிசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து கருகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.