தேவாலயங்களுக்கு..

வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை இன்று முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள் தேவாலயங்களை காணொளி, புகைப்படம் எடுப்பதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






