வவுனியாவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!!

786

கவனயீர்ப்பு போராட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (21.07.2020) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவனயீர்ப்பு போ ராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

அநீதியான முறையில் சேவைத்தடைக்குள்ளான அமில சுனிமலை உடனடியான சேவையில் இருத்துக , எஸ்.டி.பி வங்கியைப் பாதுகாக்கும் ஊழியர்களின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் நிறுவுக,

ஆணவம் பிடித்த நிர்வாகிகளே எஸ்.டி.பி வங்கியை கூட்டுறவு நோக்கத்திலிருந்து விலக்காதீர் என போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

30 நிமிடங்களில் அமைதியான முறையில் போ ராட்டம் நிறைவு பெற்றதுடன் போ ராட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.