கண்முன்னே உ யிரிழந்த 2 வயது மகள் : சோகத்திலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!

664

பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..

இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உ யிரிழந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது மகள் சினேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனி வழியாக தவறி விழுந்துள்ளது.

இதில் ப லத்த கா யம் ஏற்பட உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சினேகா உ யிரிழந்தார்.

மகளின் மரணத்தை கண்கூடாக பார்த்த பெற்றோர்கள் சந்திரா- சுலேகா அ திர்ச்சியில் உறைந்து போயினர். இந்தநிலையில் தங்களது குழந்தையின் கண்களை தானமாக வழங்க முடிவெடுத்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், என் மகள் இ றந்துவிட்டாலும் இந்த உலகத்தை பார்ப்பாள், இதன்மூலம் இரண்டு குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை காண முடியும்.

எங்களுடைய கண்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தோம், ஆனால் இரண்டு வயதுக்குள் எனது மகளின் கண்களை தானமாக கொடுப்போம் என நினைக்கவில்லை என்கின்றனர் கண்ணீருடன்.