வவுனியாவில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணிநேரம் விசாரணை!!

716

றிசாட் பதியுதீனிடம்..

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கு ற்றப் புலனாய்வு பிரிவினர் 5 மணிநேரம் வி சாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.

அவரை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

ஈஸ்டர் தா க் கு த ல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு றிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று (27.07) ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்றயதினம் காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆஜராகிய நிலையில் மாலை 3 மணிவரையிலான 5 மணிநேரம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

இதன்போது அவரது ஆதரவாளர்கள் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக குவிந்திருந்தமையையும், முன்னாள் அமைச்சர் விசாரணை முடிந்து வந்த பின் அவரை வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தனக்கும் ப யங்கரவாத தா க் கு த லு க் கு ம் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஏற்கனவே விசாரணைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது 15 மாதங்கள் கழித்து தேர்தல் நேரத்தில் அரசாங்கம் தன்னை திட்டமிட்டு பழிவாக்குவதாக குற்றம் சாட்டினார்.