திருகோணமலை வான் விபத்தில் பெண்ணொருவர் காயம்!!

651

வான் விபத்தில்..

திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று (09.08.2020) திருகோணமலை – மிரிஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி வீதியிலிருந்த கல்வெட்டுடன் மோதி மறுபக்கம் குடைசாய்ந்துள்ளது. குறித்த வானில் பயணித்த ஆறு பேரில் பெண்ணொருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது விருப்பத்தின் படி வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், வவுனியா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு கையொப்பமிட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.