காதலர் தினத்தில் காதலியை கரம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி!!

291

Mariageமதுரையை அடுத்து அழகர் கோவிலில், சென்னையைச் சேர்ந்த ஜெகன் என்ற ஜெகதீசன் (36) என்ற ஆயுள் தண்டனை கைதிக்கும் இவர் காதலித்த அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

உறவினர்கள் அவர்களை வாழ்த்தினார்கள். காதல் ஜோடி தம்பதிகள் கோவில் முன்பாக ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர்.

ஜெகன், முன்னாள் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் உள்ளார்.

தற்போது தனது தாயின் உடல்நலம் காரணமாகப் பரோலில் உள்ள அவர், உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாக அவர் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த சுமதியை குல தெய்வமான அழகருக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், தனது நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, விடுதலை செய்யுமாறு அரசுக்கு ஜெகன் கோரிக்கை விடுத்துள்ளார்.