கனடாவில் படகு விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் ஒருவர் பலி : 6 பேர் காயம்!!

957

கனடாவில் ஏற்பட்ட படகு விபத்து இலங்கையை சேர்ந்த ஒருவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரொரன்ரோவில் Woodbine கடற்பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உ யிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்பவர் உயிரிழந்துள்ளார்.

20 அடி bowrider படகு ஒன்றை 46 வயதான ஆண் ஒருவர் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகில் ஆறு பயணிகள் இருந்தனர்.

படகை இயக்கியவர் கட்டுப்பாட்டை இழந்து, Woodbine கடற்கரைக்கு அருகே கரையிலிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் படகை பாறைகளில் மோதினார்.

படகு பாறைகளில் மோதியதன் விளைவாக, 47 வயதான ஒருவர் உ யிருக்கு ஆ பத்தான கா யங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உ யிரிழந்துள்ளார்.

படகை இயக்கியவரும் மீதமிருந்த பயணிகளும் உ யிருக்கு ஆ பத்தான கா யங்களுக்கு உள்ளானார்கள். இவர்களில் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் 3 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர். படகில் பயணித்த அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குறித்த படகு அதிவேகமாக பயணித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து Toronto காவல்துறையின் போக்குவரத்து சேவைகள் பிரிவும் கடல் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.