வவுனியாவில் 1340 ஆவது நாளாக போ ராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரினால் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம்!!

730

கவனயீர்ப்பு போ ராட்டம்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று இன்று (19.10.2020) இடம்பெற்றது.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றது.

வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 1340 ஆவது நாளாக சுழற்சி முறையசில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவர்களது போ ராட்ட தளத்திற்கு முன்னால் குறித்த கவனயீர்ப்பு போ ராட்டமும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற ப டு கொ லை க ள், கா ணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச வி சாரணை தேவை என இதன் போது கோரிய கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகவியலாளர் நிமலராஜனின் படத்திற்கு மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி, மலர்தூபி அஞ்சலியும் செலுத்தினர்.