வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!!

630

கவனயீர்ப்பு போராட்டம்..

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று(05.01.2021) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது வவுனியா, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடிய விடவேண்டாம்,

தமிழ் அரகசியல் கைதிகளின் விடுதலை ஜனாதிபதியின் பொங்கல் பரிசு, தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்’ ஆகிய சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நீதிக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் பி.யூலியஸ், முன்னாள் அரசியல் கைதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.