வவுனியாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2497

கொரோனா..

வவுனியாவில் நேற்றைய தினம் வெளியான முடிவுகளின்படி மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் நேற்று (25.01.2021) இரவு வெளியாகியது.
அதனடிப்படையில் வவுனியாவின் நகரப் பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 12 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

மேலும் மடுக்கந்தையில் ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் என நேற்று மட்டும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நேற்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் கடந்த கடந்த 1ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது.