சமையலில் தக்காளி போடாததால் மனைவியை அடித்தே கொன்ற நபர்!!

326

Tomotoஇந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் கூட்டில் தக்காளி சேர்க்காததால் ஒருவர் மனைவியை கொலை செய்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாநிலம் ரிஷிகேஷ் நகர் அருகே உள்ள லாச்மன் ஜூலா பகுதியைச் சேர்ந்தவர் பிரபா தேவி(30). அவரது கணவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபா தேவி தனது கணவருக்கு உணவு பரிமாறியுள்ளார். அப்போது காய்கறி கூட்டில் ஏன் தக்காளி போடவில்லை என்று கூறி அவர் பிரபா தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது மனைவியின் தலையை சுவரில் வேகமாக மோதினார். இதில் படுகாயம் அடைந்த பிரபா தேவி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் பிரபா தேவியின் கணவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.