இலங்கையில் பேருந்துகளில் கடுமையாக அமுலாகும் சட்டம்!!

1343

பேருந்துகளில்..

பேருந்தில் பயணிக்கும் போது சுகாதார ஆலோசனைகளை கடுமையாக பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பின்பற்றாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் இது தொடர்பில் தீவிர அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.