விடுமுறை..

மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளும் தற்காலிகமாக மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகள் என்பன தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாடசாலைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.





