இலங்கையில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று : இருவரின் நிலை கவலைக்கிடம்!!

750

கொரோனா தொற்று..

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுக்குள்ளான அதிகமான கர்ப்பிணிகள் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இயலுமானவரை வீட்டில் இருந்து கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கர்ப்பிணி தாய்மாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.