காயத்ரியை கன்னத்தில் அறைந்த நடிகர்..

1314

gayathri

கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படம் பொன் மாலை பொழுது. காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.சி.துரை டைரக்ஷன். அவர் கூறியதாவது: இப்படத்தில் தந்தை மகளுக்கு இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. தந்தையாக அருள்தாஸ், மகளாக காயத்ரி நடித்தனர்.

வாக்குவாதம் முற்றிய காட்சியில் காயத்ரியை அறைவதுபோல் அமைந்தகாட்சியில் உண்மையிலேயே காயத்ரியை கன்னத்தில் அறைந்துவிட்டார் அருள்தாஸ். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் காயத்ரி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரிடம் அருள்தாஸ் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகே அவர் சமாதானம் அடைந்தார். இப்படத்தை அமிர்த கௌரி தயாரிக்கிறார்.