வௌ்ளவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாத்தரையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து இந்நபர் உயிரிழந்துள்ளார். தாழையடி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கெண்டுள்ளனர்.





