நேற்றும் 98 பேர் கொரோனாவால் பலி : மரணங்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்தது!!

854

கொரோனாவால்..

இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினம் (06.08.2021) 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5017 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் பதிவான 98 கோவிட் மரணங்களில் 47 ஆண்கள் எனவும், 51 பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில், 30 முதல் 59 வயது வரையிலான 20 கோவிட் மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 78 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.