நாட்டில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா மரணங்கள் : இன்றும் 100 ஐ அண்மித்த பலி எண்ணிக்கை!!

1247

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 94 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,268 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கோவிட் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 726 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று இதுவரையில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,956 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,956 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,268 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.