இலங்கையில் 200 ஐ அண்மித்த கொரோனா மரணங்கள் : ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவானது!!

851

கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 195 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6985 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் (19.08.2021) இலங்கையில் 195 பேர் கோவிட் பெருந்தொற்று காரணமாக மரணித்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் 98 பேர் ஆண்கள் என்பதுடன் 97 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் எனவும், நாற்பத்து மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், நூற்று ஐம்பத்து ஒருவர் 60 வயதையும் கடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இதுவரையில் கோவிட் காரணமாக மொத்தமாக 6985 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய மரணங்களாக நேற்றைய தினம் பதிவான 195 மரணங்கள் காணப்படுவதுடன் அண்மைய நாட்களாக இந்த நாள் ஒன்றிலான அதி உச்ச எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.