இலங்கையில் 200 ஐ நெருங்கிய கொரோனா மரணங்கள்!!

840

கொரோனா..

கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,183ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,099 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,884 ஆக உயர்வடைந்துள்ளது.