மூன்று குழந்தைகள்..
கோவிட் தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த விடயத்தை கொழும்பு டி.சொய்சா பெண்கள் வைத்தியாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவிட் தொற்றுக்கு இலக்கான குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தாயும், மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.