மகனை கொலை செய்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

1531

தஞ்சை..

தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார்.

இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா பிளாட் போட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

தொழில் சம்பந்தமாக ஏற்கனவே அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலை நேற்றிரவு கனகதுர்கா தனது தம்பிக்கு நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலை பார்த்த தம்பி அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூக்கில் தொக்கிய நிலையில் இறந்துகிடந்துள்ளார்.

இதனையடுத்து அங்க வந்த கள்ளபெரம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உ.டற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மகனை கொலை செய்துவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது