9 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!

447

Abuse9 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி 13ம் திகதி – 21ம் திகதி வரையான காலத்தில் இந்த வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபரின் மனைவி அவரை விட்டுச் பிரிந்து சென்றுள்ள நிலையில் வேறு திருமணம் முடித்து வாழ்ந்து வரும் சந்தேகநபர் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என சந்தேகநபர் சிறுமியை அச்சுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தங்கொட்டுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.