நாளைய தினம் நீண்டநேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு!!

1655

மின்வெட்டு..

நாளை தினமும் (24) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் தலா 3 மணிநேரமும் 20 நிமிடங்களும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் தலா ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரை ஒரு மணிநேரமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.