மேலும் 22 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா..!

671

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார்.