வவுனியாவில் வீசிய மினி சூறாவளி : பாடசாலை கட்டிடம் சேதம்!!

1093

வவுனியாவில்..

வவுனியாவில் வீசிய மினி சூறாவளியுடன் பெய்த மழையால் மரம் ஒன்று பாறி விழுந்தமையால் வகுப்பறை கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.

வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் மினி சூறாவளியுடன் கூடிய மழை நேற்றைய தினம் (24-03-2023) மாலை பெய்திருந்தது.

இதன்போது வவுனியா, மன்னார் வீதியில் உள்ள தமிழ், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கும் காமினி மகாவித்தியாலய வளாகத்தில் நின்ற பாலை மரம் ஒன்று பாறி விழுந்தமையால் வகுப்பறை கட்டிடம் ஒன்றின் கூரைப் பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.

இதேவேளை, குறித்த மினி சூறாவளி காரணமாக வவுனியாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.