வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம்.. விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!!

1346

தாழமுக்கம்..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் இன்று (06.05.2023) மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உட்பட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தை வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.