இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை.. யார் வரி செலுத்த வேண்டும்?

1050

புதிய நடைமுறை..

வரி செலுத்துவதற்கு அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவதை முறையான முறையில் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நேற்று (06.06.2023) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வரி செலுத்தும் வலையமைப்பை இனங்கண்டு அதனை விரிவுபடுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகையில், “அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், புதிய விதிகளின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்.

தற்போது மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமான வரிப் பதிவேடுகளை ஆரம்பிக்கவுள்ளோம். ஆகவே புதிய விதிகளின் படி, குறிப்பாக நாடாளுமன்றம், மாகாண சபைகள் அல்லது உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்களும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது. நாட்டில் யார் வரி செலுத்த வேண்டும் என்பதை இது தீர்மானிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.