காதலி கொலை.. காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

835

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது கீர்த்தி. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் 24 வயது கங்காதரை காதலித்தார் . இதில் கங்காதர் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தார்.

அத்துடன் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் கீர்த்தி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர்.

இது குறித்து கீர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கங்காதரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கீர்த்தி உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கீர்த்தியை நேற்று ஜூன் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் . நேற்று காலை 6 மணிக்கு இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.

கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், கீர்த்தி வீட்டுக்கு சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடைய சகோதரர் ஆறுதல் கூறி கங்காதரை பைக்கில் அழைத்து சென்றார்.

திடீரென ஒரு இடத்தில் பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.