அனிதா..
பள்ளி படிக்கும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து தனது உடல் வெந்துபோன நிலையில், தற்போது கர்ப்பிணியாக நின்று உதவிக்காக கதறிய பெண்ணின் காணொளி வைரலாகி வருகின்றது.
அனிதா என்ற இந்த பெண் பள்ளி படிக்கும் போது கேஸ் வெடித்து தீவிபத்தில் சிக்கி தனது உடம்பு சிதைந்து போயுள்ளது. இதில் இவரது வாய் எதையும் சாதாரணமாக சாப்பிட முடியாத அளவிற்கு பாதித்துள்ளது.
குடும்பத்தினர் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்த பெண் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில், தனக்கு பிரசவம் பார்ப்பதற்கு உதவ வேண்டும் என்று நபர் ஒருவரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
குறித்த நபரும் தான் உதவுவதாக கூறியதோடு, அப்பெண்ணிற்கு தற்போதைய தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்.