வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

3880

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று (17.08.2023) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.



விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகினார்.

விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.