உளநல தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு நாடகம் ஒன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இன்று (10.10) இடம்பெற்றது. அரங்காலையா கலைக்கூடம் கலைஞர்களினால் உளநலன் தொடர்பான இவ் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகமும், மாவட்ட பொது வைத்தியசாலை உளநல பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் உளநல வைத்தியர் சுதாகரன், வைத்தியர் திருமதி வைதேகி திலீபன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுகாசினி சிவதர்சன்,
உளநலத்துறை உத்தியோகத்தர் திருமதி துஷாந்தன் பிரியதர்சினி, பாடசாலையின் அதிபர் நா.இந்திரகுமார், ஈச்சங்குளம் கிராம சேவகர் ஜே.அமலதாஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.