அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல்(27) விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன்(27.10.2023) நிறைவடைகின்றது. இந்த நிலையில், மூன்றாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படும்.