வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் ஆறு பேர் கைது : பொலிசார் அதிரடி!!

1915

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என அடையாளம் கண்டுகொண்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான
0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.