வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு பயிற்சி!!

1510

வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு கலைக்கூறு -1 பயிற்சியானது இரு தினங்களாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை மத்திய கல்லூரியில் இப் பயிற்சியானது நேற்றும் (08.08), நேற்று முன்தினமும் (07.08) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலமையில் இடம் பெற்ற இப்பயிற்சியில் பயிற்சித் தலைவராக ப.அஜித்குமார், உதவிப் பயிற்சி தலைவர்களாக ரா.வரதராஜா, யோ.கேதீசன் ஆகியோரும் பயிற்சிநெறியை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில், வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர், உதவி மாவட்ட ஆணையாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.