2024 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!!

1016

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை நிறைவு பெறவுள்ளது.



இதன்படி, பாடசாலைகளின் மூன்றாவது தவணைக்கான முதல் கட்டம் ஓகஸ்ட் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

மேலும், ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் 2ஆம் தவணை முடிவடைவதை தொடர்ந்து 3ஆம் தவணைக்கான ஆரம்பம் வரை மாணவர்களுக்கான 2ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.