அவுஸ்திரேலியாவில் விபரீத முடிவெடுத்த இலங்கைத் தமிழர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

642

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.

இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார்.  எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.